துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்ட பூமி பூஜை

பொள்ளாச்சி அருகே வடசித்தூரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

பொள்ளாச்சி அருகே வடசித்தூரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
 வடசித்தூரில் செயல்பட்டு வந்த துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதயைடுத்து, புதிய கட்டடம் கேட்டு விவசாயிகள் சார்பில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதையடுத்து, ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வடசித்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமி பூஜையைத் தொடக்கிவைத்தார்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, கிணத்துக்கடவு பேரூராட்சி துணைச் செயலாளர் டி.எல்.சிங், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் காளிமுத்து, ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் , ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவராசு, கூட்டுறவு வங்கித் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) முரளிமோகன் தம்பி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com