தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. பட்டமளிப்பு விழா: பட்டங்கள் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவையொட்டி,  மார்ச் 31-ஆம் தேதி வரையில் தேர்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவையொட்டி,  மார்ச் 31-ஆம் தேதி வரையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 39- ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகத்தால் 2018 மார்ச் 31-ஆம் தேதி வரையில் தேர்வு முடிவுகள் அறிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை படிவத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டேட் வங்கி இணையதள முகவரியில்  (C​O​N​T​R​O​L​L​ER, TN​AU, CO​I​M​B​A​T​O​RE) 
கணக்கில் செலுத்த வேண்டும். 
பட்டங்களை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளுடன் (அதாவது தாற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் (PC) நகல்,  இறுதி பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல்,  இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டண ரசீது மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள்) ஜூன் 26 - ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com