மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 21 பேர் தேர்ச்சி

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய குழந்தைத் தொழிலாளர்கள் 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய குழந்தைத் தொழிலாளர்கள் 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களை தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்ட அலுவலர்கள் மீட்டு சிறப்பு பள்ளிகளிலும், முறைசார்ந்த பள்ளிகளிலும் பயில வைக்கிறார்கள்.
இவ்வாறு பயின்று வருபவர்களில் 22 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மாறுவாழ்வு திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com