மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கோதண்டராமர் கோயில் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து கங்கனம் கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து 9 மணி அளவில் சிறுமுகை புதூர் வீரகுமாரர்கள் கத்தி போட, சிம்ம வாகனத்தில் சக்தி சாமுண்டேஷ்வரி அழைப்பு நடைபெற்று. அதன் பின்னர் கிராம தேவதை பூஜை, நீலகிரி ரங்ராமருக்கு கவாளம் கொடுத்து பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோதண்டராமருக்கு பூஜை, மதியம் 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாரதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு கோதண்டராமர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 6 மணி அளவில் ராமர் கோயில் பஜனை குழுவினர், சுற்றுவட்டார பஜனை குழுவினரின் அகண்ட பஜனை நடைபெற உள்ளது. இந்த விழா வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.