டாடாபாத், சூலூரில் அக்டோபர் 20இல் மின் நிறுத்தம்

டாடாபாத், சூலூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதா

டாடாபாத், சூலூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அக்டோபர் 20ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் டாடாபாத் துணை மின் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில், வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், கே.கே.புதூர் வீதி 1 முதல் 8 வரை, சென்ட்ரல் திரையரங்கம், திவாண்பகதூர் சாலை, பூ மார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கே கவுண்டர் வீதி, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, கே.எம்.டி.நகர், கட்டபொம்மன் சாலை, கஸ்தூரிபாய் சாலை, கணபதி, காந்திபுரம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தயச் சாலை, பயணியர் மாளிகை, விமானப்படைக் கல்லூரி, பழையூர், பி.என்.பாளையம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மின் மாயானம், சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, புதியவர் நகர் மற்றும் ஆவாரம்பாளையம்.
மின் நிறுத்தம் செய்யப்படும் சூலூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்:  சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவுத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com