ஈரோட்டில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் இருவேறு இடங்களில்  புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் இருவேறு இடங்களில்  புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காந்திஜி சாலையில் ஜவான் பவன் அருகே  முஸ்விம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஏ. சித்திக் தலைமை வகித்தார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. மக்கள்ராஜன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டலப் பொறுப்பாளர் என். விநாயகமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எம். நூர்சேட், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலர் சிந்தனைச்செல்வன், மாநில தொழிலாளர்அணிச் செயலர் மு.சம்சுதீன், எழுத்தாளர் வே. மதிமாறன், பேச்சாளர் அப்ரார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக,  மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர்  பி. சலீம் வரவேற்றார்.  மாவட்டப் பொருளாளர் எஸ். இலியாஸ் நன்றி கூறினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் பர்கான்அகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் முகமதுஆசாத்அலி மற்றும் திரளான மகளிர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com