ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், பெருந்துறை கிளை, புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இதன், திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட இணை பதிவாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வாங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.யசோதாதேவி முன்னிலை வகித்தார். பெருந்துறை கிளை மேலாளர் லோகநாதன் வரவேற்றார். பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இதில், வங்கி இயக்குநர் எஸ்.சித்ரா மற்றும் பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ், பெருந்துறை அதிமுக பேரூர் செயலர் வி.பி.கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். பெருந்துறை கிளை உதவி மேலாளர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.