கொமதேக நிர்வாகிகள் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலர் துரை ராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கொமதேக சார்பில் 100 பேர் சென்று திமுகவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்படும். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகத் தர வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில மகளிரணிச் செயலர் கோகிலா, மாவட்ட மகளிரணிச் செயலர் ஜோதி, மாவட்டத் துணைச் செயலர் தமிழ்செல்வன், பவானி நகரச் செயலர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com