கோபி நகர திமுக சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழா பெரியார் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார். திமுக நகர மாணவர் அணி அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார்.
கோபி நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், தமிழகத்தில் 89 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிழல் முதல்வராக செயல்பட்டு வருகிறார். தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் 54 சதவீதம் பேர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்றார். கூட்டத்தில், திமுக மாவட்ட நிர்வாகிகள் கோபி நகர ஒன்றியச் செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.