மத்திய அரசின் பவர்டெக்ஸ் திட்டம் தொடர்பான கருத்தரங்கு ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
மத்திய விசைத்தறி மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், மாணிக்கம்பாளையம் வாரச் சந்தை எதிரே நடுகாட்டுத் தோட்டத்தில் உள்ள ஸ்ரீவேல்டெக்ஸ் நிறுவனத்தில் இக்கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், ஜவுளித் துறையினர் பங்கேற்று இத்திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளலாம் என ஈரோடு விசைத்தறி பயிற்சி மைய உதவி இயக்குநர் சுதா ராணி தெரிவித்துள்ளார்.