மாநில அளவிலான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டி

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான திருக்குறள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில், மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான திருக்குறள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் மொத்தம் 10 மையங்களில் நடைபெற உள்ளது. ஈரோட்டில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தில்லை நகர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். சென்னையில் ஜூலை 22-ஆம் தேதியும், புதுச்சேரியில் 23-ஆம் தேதியும், நெல்லையில் 29-ஆம் தேதியும், மதுரையில் 30-ஆம் தேதியும் நடைபெறும். திருவாரூரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி, திருச்சியில் 6-ஆம் தேதி, கோவையில் 12-ஆம் தேதி, சேலத்தில் 19-ஆம் தேதி, வேலூரில் 20-ஆம் தேதியும் இப்போட்டிகள் நடைபெறும்.
 இதற்கான விண்ணப்பப் படிவத்தை ‌w‌w‌w.‌s‌h‌r‌i‌r​a‌m​c‌h‌i‌t‌s.​c‌om என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 24-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் இடைநிலைப் பிரிவிலும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலைப் பிரிவிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மேல்நிலைப் பிரிவிலும், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம்.
 திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கும் வகையிலும் திருக்குறள் சார்ந்த தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிக்கான தலைப்பு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com