பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் அரசுப் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தர்னாவில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச பொதுசெயலாளர் குழந்தைசாமி தலைமை வகித்தார்.
இதில், 13-ஆவது ஊதியக்குழு ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம்பள முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில், தொமுச மாநிலப் பொருளாளர் நடராஜன், ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் லட்சுமணன், சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், டிடிஎஸ்எப் மாநில துணைத் தலைவர் ஷாஜகான், மண்டல பொதுச்செயலர்கள் ஜான்கென்னடி, சுகுமார், பாலகிருஷ்ணன், சண்முகம், அருள், முருகானந்தம், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.