ஈரோடு
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட அப்துல் கலாம், அன்னை தெரசா இளைஞர் சங்கம் சார்பில் உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு, சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.
தேவாலா காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தேவராரஜ், பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சாலைப் பாதுகாப்பின் அவசியம், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர்.
ஆசிரியர்கள் சுரேஷ், ராஜேந்திரன், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் உமேஷ்லால் நன்றி கூறினார்.