ஈரோடு அருகே நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகலா தலைமை வகித்தார். தொடர்ந்து, பள்ளி வழிபாட்டுக் கூடத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து ஆசிரியர்கள் பேசினர். ஆசிரியர்களின் செலவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்கறி சாதம் மதிய உணவாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 18 ஆசிரியர்கள், 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.