பயிர்க் காப்பீட்டு திட்டம்: நெல் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர பெருந்துறை பகுதி சம்பா நெல் விவசாயிகளுக்கு முள்ளம்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர பெருந்துறை பகுதி சம்பா நெல் விவசாயிகளுக்கு முள்ளம்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
இதில், வேளாண்மை உதவி இயக்குநர் ரங்கநாயகி பங்கேற்றுப் பேசியதாவது:
பெருந்துறை வட்டார முள்ளம்பட்டி, நல்லாம்பட்டி, ஊஞ்சப்பாளையம், நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், பெரியவிளாமலை, திருவாச்சி, காஞ்சிகோயில், கோவில்பாளையம், ஒலப்பாளையம், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், சிங்கநல்லூர், கம்புளியம்பட்டி, ஆயிகவுண்டன்பாளையம், கந்தாம்பாளையம், பூவம்பாளையம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
இதற்கு, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் முன்மொழிப் படிவம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பொதுசேவை மையம், கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய வங்கிகளில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி பயன்பெற கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com