கொடுமுடி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

கொடுமுடி கிளை நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, புத்தகக் கண்காட்சி, புதிய புரவலர்களுக்கான சிறப்பளிப்பு விழா, பள்ளி

கொடுமுடி கிளை நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, புத்தகக் கண்காட்சி, புதிய புரவலர்களுக்கான சிறப்பளிப்பு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  சிறப்பளிப்பு விழா, புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக விழா என ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 புத்தகக் கண்காட்சியை, கொடுமுடி  முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஓ.இ.பாலகிருஷ்ணன் தொடக்கிவைத்தார். மாவட்ட நூலக நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் அ.சுந்தரசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் எம்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கணேசர் செந்தமிழ்க் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பொன்.கதிரேசன் சிறப்புரையாற்றினார்.
  விழாவில், பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கொடுமுடி கிளை நூலகர் கு.சதாசிவம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com