தேசிய தடகளப் போட்டி: கொங்கு பள்ளி மாணவி சிறப்பிடம்

தேசிய தடகளப் போட்டியில் கொங்கு பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளார்.

தேசிய தடகளப் போட்டியில் கொங்கு பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளார்.
இந்திய பள்ளிக் கல்வி விளையாட்டுக் குழுமம் நடத்திய 63-ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்றது. இதில், 29 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 
இதில், 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில், கொங்குப் பள்ளி மாணவி எம்.கெளசல்யா தமிழக அணியின் சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். 
மாணவி எம்.கெளசல்யா, பயிற்சியளித்த  உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோரை பள்ளித் தலைவர் ஜி.யசோதரன், துணைத் தலைவர் குமாரசாமி, தாளாளர் டி.என்.சென்னியப்பன், பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com