பறக்கும் படை  ஆர்.டி.ஓ. சோதனை: ஒரே நாளில்  ரூ. 2.54 லட்சம் வசூல்

பெருந்துறை பகுதியில் பறக்கும் படை ஆர்.டி.ஓ. மேற்கொண்ட வாகனச் சோதனையில் ஒரே நாளில் ரூ. 2.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

பெருந்துறை பகுதியில் பறக்கும் படை ஆர்.டி.ஓ. மேற்கொண்ட வாகனச் சோதனையில் ஒரே நாளில் ரூ. 2.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி, கோவை - சேலம் புறவழிச்சாலை, துடுப்பதி பிரிவு ஆகிய இடங்களில் பறக்கும் படை ஆர்.டி.ஓ. பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) காலை முதல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
இதில், அதிக பாரம் ஏற்றிய 15 சரக்கு வாகனங்கள், கூடுதல் எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றி வந்த 3 பேருந்துகள், ஆள்களை ஏற்றி வந்த 2 டெம்போ டிராவலர் வேன்கள் என 20 வாகனங்களுக்கு ரூ. 2.54 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com