பவானிசாகர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

பவானிசாகரை அடுத்த இக்கரைதத்தப்பள்ளியில் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

பவானிசாகரை அடுத்த இக்கரைதத்தப்பள்ளியில் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
பவானிசாகரை அடுத்த இக்கரைதத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் தாசே கவுடர் (46). இவர் தோட்டத்துக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அப்போது, கால் தவறி கிணற்றில் விழுந்தார்.
பக்கத்து தோட்டத்துக்காரர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தாசே கவுடர் உயிரிழந்தார். 
இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com