பெருந்துறையில் நடமாடும் நீதிமன்றம் மூலமாக ஒரே நாளில் 219 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
பெருந்துறை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் நவநீதன் தலைமையில், உதவிஆய்வாளர் தண்டபாணி உள்ளிட்ட போலீஸார் பெருந்துறையில் பல்வேறு பகுதியில் வாகனத் தணிக்கையில் கடந்த வாரம் ஈடுபட்டனர்.
இதில், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 219 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவற்றை விசாரித்த நடமாடும் நீதிமன்ற நீதிபதி பத்மபிரியா, 219 வழக்குகளுக்கு ரூ. 33 ஆயிரத்து 700-ஐ அபராதமாக விதித்தார்.