பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி, நாகப்பகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் அம்மாசை என்பவரது மகன் கார்த்தி (25) , விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் வேலை செய்து வந்தார். இவர், பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது, ஆம்னி வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.