விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு காப்பீட்டுத் தொகை மூலமாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.
சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர் என்.நவீனின் தந்தை நல்லசாமி, 2017 நவம்பர் 25-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவர் நவீன் தடையின்றி கல்வியைத் தொடரும் வகையில் பள்ளி நிர்வாகம், ராயல் சுந்தரம் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தது.
மாணவரின் தந்தை இறப்புக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய காப்பீட்டுத் தொகை ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை என்.நவீனுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் முன்னிலையில், பள்ளித் தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து வழங்கினார். உடன், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.கந்தசாமி, முதல்வர் ஜி.அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.