ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சத்திரப்பட்டி, கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன், மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்குத் தேவையான போர்வைகள், தரைவிரிப்புகள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்கள் விஜய், லோகேஸ்வரன், காரணம்பாளையம் வரதராஜ், சுரேஷ், தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.