கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரிச் சந்தை விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு விற்பனைச் சந்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்தையை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ தொடக்கிவைத்தார். முதல்வர் என்.ராமன் வாழ்த்தினார். வணிகம், கணிப்பொறி வணிகத் துறை இணைந்து நடத்திய இந்த சந்தையில் பல்வேறு ஆடை ரகங்கள், கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டனர்.