ஈரோடு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூர் பேரூராட்சியில் பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மண்டலத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொதுச் செயலாளரும், கோபி தொகுதி பொறுப்பாளருமான எஸ்.எம்.செந்தில்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச அடுப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் சாவித்ரி உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.