மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய தொழுநோய் தடுப்பு மையம் இணைந்து நடத்திய தேசிய தொழுநோய் தடுப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் சி.வடிவேல் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் க.புகழேந்தி வரவேற்றார். தொழுநோய் தடுப்பு மைய துணை இயக்குநர் மருத்துவர் ரமாமணி கலந்துகொண்டு தொழுநோய் குறித்து விளக்கிப் பேசினார். கல்வியாளர் பாஸ்கரன் கருத்தரங்க உரை நிகழ்த்தினார்.
தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்ட ரங்கோலிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.