பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற குவிந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் 

ஏர்செல் சேவை பாதிப்பால் ஒரே நாளில் பிஎஸ்என்எல் சேவையைப் பெற சத்தியமங்கலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் அலைமோதியது.

ஏர்செல் சேவை பாதிப்பால் ஒரே நாளில் பிஎஸ்என்எல் சேவையைப் பெற சத்தியமங்கலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் அலைமோதியது.
சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாற சத்தியமங்கலம் அலுவலகத்தில்  குவிந்தனர். புதிய சிம் கார்டு பெறுவதற்கும், நெட்வொர்க்கை மாற்றுவதற்கும் நீண்டவரிசையில் ஏராளமானோர் காத்து நின்றனர். சாதாரண நாள்களில் 20 சிம் கார்டுகள் மட்டுமே விற்பனையாகும் என்றும், 
இன்று ஒரேநாளில் மட்டும் ஆயிரம் சிம் கார்டுகள் கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பிஎஸ்என்எல் சேவையைத் துண்டித்த வாடிக்கையாளர்கள் மீண்டும் அந்த சேவையைத் தொடரக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com