பெருந்துறை ஒன்றியம், பெரியவிளாமலை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டாட்சியர் வீரலட்சுமி தலைமை வகித்தார். பெருந்துறை வட்ட வழங்கல் அலுவலர் முருகாயி முன்னிலை வகித்தார். முகாமில், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர், முகவரி மாற்றம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 10 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.