பெருந்துறை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் (பொ) சு.பிரசாத் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் டி.ராஜேந்திரன், விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.