மாவட்ட கிரிக்கெட் போட்டி: பெருந்துறை சாகர் பள்ளி முதலிடம்

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு, ஏஇடி பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு, ஏஇடி பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. 
 இப்போட்டியில், 10 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், சாகர் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடி, முதல் பரிசு, கோப்பையை வென்றனர். பள்ளி மாணவர் எல்.கே.தருண் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்றார். 
 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் எஸ்.கே.ராமசாமி, தாளாளர் சி.சௌந்திரராசன், துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், முதல்வர் கல்யாணராமன், துணை முதல்வர் ராதாமனோகரன், கல்வி அதிகாரி ஜெகநாதன், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், ஆசிரியர்கள் பாராட்டினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com