ஈரோடு
கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 4.50 லட்சம்ஊக்கத் தொகை
அவல்பூந்துறை பள்ளியூத்து கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அவல்பூந்துறை பள்ளியூத்து கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டுறவுச் சங்க செயலர் சண்முகம் வரவேற்றார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் குருமூர்த்தி கலந்துகொண்டு 1,395 உறுப்பினர்களுக்கு பங்கு ஊக்கத் தொகையாக ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்தை வழங்கினார்.
இதில், சங்க துணைத் தலைவர் கொற்றவேல் சேதுபதி, பெருந்துறை நில வள வங்கி இயக்குநர் செந்தில்குமார், சங்க இயக்குநர்கள் சென்னியப்பன், பூசப்பன், ஈஸ்வரி, அமுதா, சுப்புலட்சுமி, மாணிக்கம், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.