வாகனத் தணிக்கை: ரூ. 1.20 லட்சம் வசூல்

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் ரூ. 1.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் ரூ. 1.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 
 பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொங்கல் பண்டிகையையொட்டி முறைகேடாக இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளைக் கட்டுப்படுத்த பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். 
 இதில், வரி செலுத்தாமல் விதி மீறி இயங்கிய 20 சொகுசுப் பேருந்துகள் உள்ளிட்ட 31 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விதிமீறல்களுக்காக ரூ. 1,20,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com