வள்ளிபுரத்தான்பாளையத்தில் என்.எஸ்.எஸ். முகாம்

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்றது. 

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்றது. 
சென்னிமலை ஒன்றியம், கவுண்டிச்சிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட  வள்ளிபுரத்தான்பாளையம், மொட்டையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஒரு வார காலம் சிறப்பு நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.  
இம்முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார்.  
பள்ளித் தலைமையாசிரியர் ப.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் டி.விஸ்வநாதன் வரவேற்றார். 
முகாமையொட்டி, பல்வேறு கருத்தரங்கம், விழிப்புணர்வுகள் மற்றும் களப் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com