பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா மற்றும் ரதோற்சவத் திருவிழா கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிக்கோவிலில் பிரசித்தி பெற்ற சீதேவியம்மன் கோயிலில் வைகாசி மாதத்தில் குண்டம் விழா மற்றும் தேர்த் திருவிழா நடைபெறும். நிகழாண்டு தேர்த் திருவிழா மே16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (மே 25) இரவு கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மே 31 ஆம் தேதி குண்டம் விழாவும், ஜூன் 1 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.