ரூ. 4 லட்சம் கையாடல்:  தனியார் விடுதிக் காசாளர் மீது வழக்கு

பெருந்துறையில் உள்ள ஒரு விடுதியில் ரூ. 4 லட்சம் கையாடல் செய்ததாக அங்கு பணியாற்றிய காசாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெருந்துறையில் உள்ள ஒரு விடுதியில் ரூ. 4 லட்சம் கையாடல் செய்ததாக அங்கு பணியாற்றிய காசாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெருந்துறை, ஈரோடு சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில், ஜோதிகுமார் என்பவர் காசாளராக (கேஷியர்) பணியாற்றி வந்தார்.  
இவர், விடுதியில் தங்கும் வாடிக்கையாளர்களிடம் அதிகமாக கட்டணம் வசூலித்து நிர்வாகத்துக்கு குறைவாக கணக்கு காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதி மேலாளருக்கு   தெரியவந்தது.  இதையடுத்து அவர் விடுதி உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 
பின்னர், இது தொடர்பாக ஜோதிகுமாரிடம் விசாரித்ததில்,  அவர் ரூ. 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில்,  பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com