விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திமுக நகர அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி பெறச் செய்வது குறித்த, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம், நகரச் செயலாளர் அ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் பாண்டியராஜ், ஜபருல்லா, இளஞ்செழியன், சி.பி.எம். சார்பில் அரவிந்தன், குஞ்சுமுகமது, சி.பி.ஐ. நகரச் செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் சார்பில் அப்துப்பா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் துயில்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.