அரசு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மூன்று மாநில வன எல்லையில் கூடலூர் அமைந்துள்ளதால் வன மாநில எல்லையோரம் உள்ள பழங்குடி கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் பழங்குடி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், வனச் சரக அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ்வேரா நாயக், கிராம நிர்வாக அலுவலர் மோசஸ், நியூஹோப் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ், பயிற்சி உதவி ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.