முதுமலை காப்பகத்தில் யானைக் குட்டி சாவு

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைக் குட்டி இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைக் குட்டி இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச் சரகத்துக்கு உள்பட்ட லிங்க் சாலை, குரும்பர்கொல்லி காப்புக்காடு பகுதியிலுள்ள கக்கநல்லா சரகத்தில், யானைக் குட்டி இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தெப்பக்காடு வனச் சரக அலுவலர் ஆரோக்கியசாமி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கால்நடை மருத்துவர் விஜயராகவனை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தார். இறந்த ஆண் யானைக்குட்டி சுமார் இரண்டு வயதுடையது என்பதும், ஆரோக்கியக்குறைவால் உயிரிழந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com