கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வழக்கடவு பகுதியில் உள்ள புஞ்சக்கொல்லி பழங்குடி கிராமத்துக்கு மாவோயிஸ்டுகள் வந்ததாக கிடைத்த தகவலையடுத்து நாடுகாணி, பாட்டவயல், அய்யன்கொல்லி, சோலாடி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழக போலீஸார் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.