உதகையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

உதகையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

உதகையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக,  மாவட்ட  ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனியார் துறையினர் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தாரும்,  கோவையைச் சேர்ந்த அபிராமி மருத்துவமனை நிறுவனத்தாரும் பங்கேற்று அவர்களது நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
 யுனைடெட் இந்தியா நிறுவனத்தினர் உதகையில் உள்ள தமது அலுவலகத்துக்கு வேண்டிய இன்சூரன்ஸ் அட்வைசர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  இதற்கான நேர்காணலில் 18 வயது நிறைவடைந்தவர்களில் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற எவரும் பங்கேற்கலாம்.
 அதேபோல,  கோவையைச் சேர்ந்த அபிராமி  மருத்துவமனை நிறுவனம் ஸ்டாப் நர்ஸிங்,  நர்ஸிங்  அசிஸ்டென்ட் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப உத்தேசித்துள்ளனர்.  இதற்கான நேர்காணலில்  ஜெனரல்  நர்ஸிங்,  மிட்வைஃப்,  அசிஸ்டென்ட்  நர்ஸிங் போன்ற பணிகளுக்கு உரிய கல்வித் தகுதி கொண்ட நபர்கள் பங்கேற்கலாம்.  
மேலும், இந்நிறுவனம் இதர அலுவலகப் பணிகளுக்கென்று பட்டதாரிகளையும்,  ஓட்டுநர் பணிக்கென பேட்ஜ்  லைசென்ஸ்  உரிமம் பெற்ற இளைஞர்களையும் தேர்வு செய்யவுள்ளனர்.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தவறாமல் தங்களது கல்விச் சான்றிதழையும்,  சுய விவரக் குறிப்பையும் எடுத்து வரவேண்டும்.  
இப்பணிகளுக்கான தகுதியும்,  விருப்பமும்  உள்ள இளைஞர்கள்  இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயனடையலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com