நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த தமிழக-கேரள வன எல்லையில் நக்ஸல் ஒழிப்பு பிரிவு போலீஸார் புதன்கிழமை திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தேவாலா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தமிழகத்தின் கிளன்ராக், காட்டிமட்டம், கேரள எல்லையில் உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.