கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் பார்வதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவகுமார் தேசியக் கொடியை ஏற்றினார். உழவர் சந்தை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தம்பிராமசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செந்தில் குமாரி தேசியக் கொடியை ஏற்றினார். மார்த்தோமா நகரிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சங்கச் செயலாளர் அருண்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல, அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் சுதந்திர தினம்
கொண்டாடப்பட்டது.