நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
அதன்படி, உதகை வட்டாரத்தில் சிறியூர் சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டாரத்தில் கோடமலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்திலும், கோத்தகிரி வட்டாரத்தில் பெள்ளாடா சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டாரத்தில் கரிகல்வளை சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டாரத்தில் புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டாரத்தில் குன்னலாடி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.