குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு வியாழக்கிழமை தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் வனச் சரகத்திலுள்ள புளியம்பாறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகையான குறைக்கும் மானின் இறைச்சி வைத்திருப்பதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடலூர் வனச்சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிக்குமார், வனக் காவலர்கள் சங்கர், பிரவீண் ஆகியோர் புளியம்பாறை பகுதியிலுள்ள அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு, குரைக்கும் மானின் இறைச்சி 2 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இறைச்சியைக் கைப்பற்றிய வனத் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜன் (28), ராஜன் (42)ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.