குன்னூரில் விநாயக சதுர்த்திக்காக ஒட்டப்படிருந்த சுவரொட்டிகளை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கார்திக் விடுத்துள்ள அறிக்கை:
விநாயக சதுர்த்திக்காக குன்னூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டிருந்தன. அதனை யாரோ சிலர் அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.