சுவரொட்டிகளைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

குன்னூரில் விநாயக சதுர்த்திக்காக ஒட்டப்படிருந்த சுவரொட்டிகளை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் விநாயக சதுர்த்திக்காக ஒட்டப்படிருந்த சுவரொட்டிகளை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கார்திக் விடுத்துள்ள அறிக்கை:
 விநாயக சதுர்த்திக்காக குன்னூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் சனிக்கிழமை ஒட்டப்பட்டிருந்தன. அதனை யாரோ சிலர் அகற்றியுள்ளனர்.
 இதுகுறித்து, காவல் துறையினர் விசாரித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com