சாலை விபத்தில் இளைஞர் சாவு

உதகை அருகே பிங்கர்போஸ்டு பகுதியில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம்  மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

உதகை அருகே பிங்கர்போஸ்டு பகுதியில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம்  மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
  உதகை அருகே உள்ள பிங்கர்போஸ்ட், வி.சி.காலனி பகுதியைதச் சேர்ந்தவர் விமல் (27). மணல் இறக்கும் வேலை செய்து வந்தார். திங்கள்கிழமை இரவு
வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   
 இதுகுறித்து, தகவலறிந்த நகர மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வேஷ்வரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விமலின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com