கோத்தகிரியில் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் செய்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி அரவேணு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி சந்திரிகா. இவர், அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) இரியன் ரவிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சந்திரிகாவின் கிளினிக்கில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் ஹோமியோபதி, அக்குபஞ்சர் படித்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கான சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் சந்திரிகா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.