விவசாயக் கடன்களுக்கான இசைவுக் கடிதம் வழங்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி

நீலகிரி மாவட்டத்தில் விவசாயக் கடன்களுக்கான இசைவுக் கடிதத்தை வழங்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதியாகும்.  

நீலகிரி மாவட்டத்தில் விவசாயக் கடன்களுக்கான இசைவுக் கடிதத்தை வழங்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதியாகும்.  
இதுதொடர்பாக, மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. அதன்படி, அந்த அறிவிப்பின்கீழ் பயனடைந்த விவசாயிகள் தாங்கள் விவசாயக் கடன் பெற்ற வங்கிக் கிளைகளுக்கு உடனடியாகச் சென்று தங்களது இசைவுக் கடிதத்தை கொடுத்து கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான கடைசி நாள் இந்திய ரிசர்வ் வங்கியால் ஆகஸ்ட் 31-ஆம் தேதியே என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com