உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம்: 143 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு

உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 143 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 143 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதிகள்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 143 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இம்மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவற்றின் மீது  உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கடந்த கூட்டத்தில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள மனுக்கள் மீதும் உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 13-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான  ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலால்துறை உதவி ஆணையர் முருகன்,  தனித் துணை ஆட்சியர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மகபூப் பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com