கோத்தகிரியில் அனுமன் சேனா அமைப்பு சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரியில் அனுமன் சேனா அமைப்பு சார்பில், பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் கோத்தகிரி, டானிங்டன் பகுதிக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து தொடங்கிய ஊர்வலமானது, ஜான்ஸ் சதுக்கம், பேருந்து நிலையம், கைகாட்டி வழியாகச் சென்று உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி, நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.